Connect with us

50 வயதில் தனக்கு பிறந்த மகள் மற்றும் மனைவியுடன் திருப்பதிக்கு வந்த பிரபுதேவா.! முதன்முறையாக வெளியான புகைப்படம்.!

prabhudeva2172023m 1

சினிமா செய்திகள்

50 வயதில் தனக்கு பிறந்த மகள் மற்றும் மனைவியுடன் திருப்பதிக்கு வந்த பிரபுதேவா.! முதன்முறையாக வெளியான புகைப்படம்.!

நடிகர் பிரபுதேவா

இவர் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி மைசூரில் பிறந்தார். அவரை நடன உலகிற்கு கொண்டு வந்த பெருமை அவரது தந்தை முகூர் சுந்தரையே சாரும். இவரின் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பிரபலமாக அறியப்படுகின்றார். இவர் இன்றுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார்.

Prabhu Deva 1

23 64843e89f3bdd

“மின்சார கனவு” திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில் பிரபு தேவா டான்ஸ்மாஸ்டராக இருந்து நடிகராக மாறி இயக்குனராகவும் மாறினார். தமிழில் மட்டுமல்ல ஹிந்தியிலும் பெரிய இயக்குனரானார். இந்த நிலையில் பிரபுதேவா பொய்க்கால் குதிரை என்ற படத்தில் நடிக்கிறார்.

99833714

பிரபுதேவாவின் இரண்டாம் மனைவிக்கு பிறந்த குழந்தை

பிரபுதேவா கடந்த 1995-ம் ஆண்டு ரம்லத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகளும் பிறந்தன. அதில் ஒரு மகன் மட்டும் கேன்சர் பாதிப்பால் கடந்த 2008-ம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். சமீபத்தில் பிரபுதேவா ஒரு பேட்டியில், எனக்கு 2ம் திருமணம் முடிந்து, குழந்தை பிறந்தது உண்மைதான். நான் 50-வது வயதில் மீண்டும் தந்தையாகி இருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சி மற்றும் நிறைவாகவும் இருக்கிறேன். என் வம்சத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை என்றார். இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

23 64ba8e6774d65

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top