சினிமாவில் நடிகைகளுக்கு பல இடங்களில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை நடப்பது சகஜமாகிவிட்டது. அப்படி பல நடிகைகள் வெளிப்படையாக தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்த சம்பவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அப்படி பிரபல நடிகை நித்யா மேனன் தனக்கு நடந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பகிர்ந்துள்ளார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன்.
கடைசியாக நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். குடும்பபாங்கான நடிகையாகவும் கவர்ச்சிக்கு நோ சொல்லி குறிப்பிட்ட கதைக்களத்தினை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியொன்றில், தமிழ் நடிகர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யசொல்லியதாகவும் கூறியுள்ளார்.
மேலும், கடைசி 4 ஆண்டுகளில் மெர்சல், சைக்கோ, திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்த சூழ்நிலையில் தற்போது நித்யா மேனன் குற்றம்சாட்டிய நடிகரின் பெயரை குறிப்பிடவில்லை.
மேலும், தமிழ் சினிமாவில் இதுபோன்ற பிரச்சனைகளை தான் சந்தித்தாகவும் தெலுங்கு சினிமாவில் இப்படி எனக்கு நடந்ததில்லை என்றும் கூறியிருக்கிறார். இப்படி நித்யா மேனன் திடீரென பாலியல் குற்றச்சாட்டை கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.