நயன்தாரா
மலையாள மொழி படங்களில் அறிமுகமாகி, அதன் பின் தமிழ் சினிமாவில் பிரபலங்களோடு நடிக்கும் வாய்ப்பை பெற்று தற்பொழுது முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வந்த இவர் தற்போது ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா 75, இறைவன், டெஸ்ட் என தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.
அத பண்ணிட்டு எங்க வேணாலும் போ
அதாவது விக்னேஷ் சிவனை திருமணம் செய்வதற்கு முன்பே அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடிக்க கமிட்டாகிவிட்டார் நயன். அப்போது விக்னேஷ் சிவன் ஒரு கண்டீசனை போட்டிருக்கிறார். அட்லீ ஜாவன் படத்தில் நடிக்க கேட்டதும், பாலிவுட் சென்றுவிட்டால் திருமணத்திற்கு தாமதமாகும் என்பதால், நீ எங்கு வேணாலும் போ, ஆனால் என்னை திருமணம் செய்துவிட்டு அதை செய் என்று கண்டிஷன் போட்டதாகவும் அதன்பின் தான் திருமணம் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. ஜவான் படத்தில் நடித்திருந்தால் குடும்ப பொறுப்பை கவனித்து கொண்டு வருகிறார். அப்படி இருக்கும் போது பாலிவுட் சென்றால் அடுத்தடுத்த வாய்ப்பு வரும் போது சம்பளத்தை உயர்த்தவும் திட்டமிட்டிருக்கிறாராம் நயன்தாரா.