நயன்தாரா – விக்னேஷ் சிவன்
கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கும் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இணைந்தார். தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார்.
சிம்பு மற்றும் பிரபு தேவாவை காதலித்து பெரும் சர்ச்சையில் சிக்கி பின்னர் அதிலிருந்து வெளியே வந்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் கோவையில் வசிக்கும் விக்னேஷ் சிவனின் உறவினரான குஞ்சிதபாதம் என்பவர்தான் சொத்து விவகாரத்தில் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் மீது லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
கதறும் நயன்தாராவின் அத்தை
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனது இதயத்தின் நான்கு குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏழ்மைய் நிலையில் இருக்கும் என்னிடம் வசதி இல்லை. இதனால் லால்குடியில் இருக்கும் எனது அண்ணன் மாணிக்கத்திடம் குடும்ப சொத்தில் எனக்கு சேர வேண்டியதை விற்று உதவுமாறு கேட்டேன்.
ஆனால் அவரோ விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து ஏற்கனவே முறைகேடாக சொத்தை விற்று ஏமாற்றிவிட்டார். இது குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், சொத்தில் ஒரு பங்கு மட்டுமே சிவக்கொழுந்துக்கு உரிமை உண்டு என்றும், மீதி பங்குகள் 8 பேருக்கும் உரியது என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று மாணிக்கம் தெரிவித்தார்.