நாட்டாமை பட நடிகை
தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களின் ராஜாவாக திகழ்ந்து வருபவர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். 90ஸ் காலகட்டத்தில் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர். 1994ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்தது நாட்டாமை படம்.
இந்த படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோரது காமெடி உச்சத்தை எட்டியது. இந்த நிலையில் அந்த திரைப் படத்தில் கவுண்டமணிக்கு பெண் பார்க்க போகும் சீனில் அந்தப் பெண்ணுடைய அப்பாவோ மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். இந்த காமெடியானது தற்பொழுது வரை பேசப்பட்டு வருகிறது.
அதே காட்சியில் வரும் பெண் பற்றி யாரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இவர் நாட்டாமை படத்திற்கு பின்னர் லிங்கா படத்தில் கூட நடித்து இருக்கிறார். அவரின் பெயர் கீர்த்தி நாயுடு. 1976 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த இவர் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்.
இவர் பிரபலமானது என்னவோ நாட்டாமை படத்தின் மூலமாக இருக்கலாம். ஆனால், இவர் இந்து , சேதுபதி ஐபிஎஸ் , நம்ம அண்ணாச்சி, மே மாதம் என்று பல படங்களில் நடித்து உள்ளார்.
அவரே வெளியிட்ட புகைப்படங்கள்
மேலும் 2000 ஆம் ஸ்ரீ ஹர்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் கீர்த்தி நாயுடு. திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ராகுல் என்ற மகன் பிறந்தார். அவருக்கு தற்போது 18 வயதாகிறது. ஆனால், இன்றும் கீர்த்தி நாயுடு அதே இளமையுடன் இருக்கிறார் என்பது ஆச்சிரியமே. இந்நிலையில் தற்போது இவரது சமீபத்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.