நடிகை நக்ஸத்ரா விஸ்வநாதன்
பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ-யில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி, வள்ளி திருமணம் ஆகிய தொடர்களில் நடித்து தமிழக மக்களின் பேராதரவை பெற்ற நடிகை நக்ஸத்ரா விஸ்வநாதன். இதனிடையே கடந்த ஜூலை மாதம் நக்ஸத்ராவின் திருமணம் நடைபெற்றது. விஷ்வா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். தம்பதிகள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு மணந்ததால், மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே நக்ஸத்ரா கர்ப்பமாக இருக்கும் தகவலை புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அறிவித்து தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார் நடிகை நக்ஸத்ரா. நக்ஸத்ராவை திருமணம் செய்துள்ள விஸ்வா, ஆழ்வார் திருநகர் பகுதியில் டாட்டூ கடை வைத்திருக்கிறார் என்றும் ஜீ தமிழ் சேனலில் சில சீரியல்களின் தயாரிப்பு நிர்வாகப் பணிகளை வருகிறார் என்றும் கூறியுள்ளனர். அவரது சகோதரி கூட சீரியல் நடிகை தானாம்.
நீச்சல் உடையில் நீருக்கடியில் போட்டோ சூட்
சமீப காலமாக சினிமா நடிகைகள் கர்ப்பகால போட்டோ சூட்டுகளை நடத்தி இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்களை சக நடிகை ஸ்ரீநிதி சுதர்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.