இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, 1998ஆம் ஆண்டுமுதல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். முதல் முதலில் பீகார் அணிக்காகக் களமிறங்கிய அவர், அடுத்து இந்திய அணியில் இடம் பிடித்து பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தினார். அதுகுறித்து தற்போது முழுமையாகப் பார்ப்போம்.
1981ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பிறந்த மகேந்திரசிங் தோனி, 1998ஆம் ஆண்டில் பீகார் மாநில U-19 அணியில் இடம் பிடித்தார். அடுத்து, 1999-ல் பீகார் அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் பங்கேற்றார்.
2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இலங்கை அணியின் குலசேகரா பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணியினை வெற்றிபெற செய்தார். 23 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த இறுதிப்போட்டியில் தோனி சிக்சர் அடித்த அந்த பந்து இத்தனை நாட்கள் யாரிடம் உள்ளது என்பது தெரியாமலே இருந்தது. மிகுந்த தேடுதல் வேட்டைக்கு பிறகு ஹாங்காங்கை சேர்ந்த ஒருவரிடம் அந்த பந்து இருப்பதை கவாஸ்கர் கண்டுபிடித்துள்ளார்.
இவர் தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.