சினிமா நடிகர்களுக்கு இருக்கும் மவுசு போலவே சீரியல் நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல மவுசு உள்ளது.சீரியலில் நடித்ததன் மூலமே பிரபலமான நபர்கள் பலர் உள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி. இதில் முதல் சீசனில் ஹீரோ மற்றும் ஹீரோயினாக மிர்ச்சி செந்தில் மற்றும் நடிகை ஸ்ரீஜா நடித்து அனைத்து தரப்பு மக்கள் கவனத்தையும் ஈர்த்தார். ரீல் ஜோடிகளாக வலம் வந்த இவர்கள் ரியல் ஜோடிகளாக மாறினார்கள்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மிர்ச்சி செந்தில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், சரவணன் மீனாட்சி சீரியலில் ஸ்ரீஜா ரொம்ப அடக்கமான பொண்ணாக நடித்திருப்பார். நான் இவர் நிஜ வாழ்க்கையில் இப்படி தான் இருப்பார் என்று நம்பி ஏமாந்துவிட்டேன்.
ஸ்ரீஜா வீட்டில் ரொம்பவும் ஸ்ட்ரிக்ட். அவருக்கு என்ன பிடிக்குமோ அது மட்டும் தான் வீட்டில் நடக்கும். சீரியலில் கூட நடிக்கும் நடிகைகளின் உண்மையான கேரக்டர் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளாதீர்கள் என்று மிர்ச்சி செந்தில் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் சென்னையில் தங்கள் சொந்த வீட்ட்டில் வாழ்ந்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.