மைக்மோகன்
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்தவர் மோகன். 80களின் ஆரம்ப கட்டத்தில் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இவர் பயணங்கள் முடிவதில்லை, இளமை காலங்கள், இதய கோவில், பிள்ளை நிலா, கோபுரங்கள் சாய்வதில்லை, மௌன ராகம், மெல்ல திறந்தது கதவு, உதயகீதம் போன்ற வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து மறக்க முடியாத நடிகராக இன்று வரை நிலைத்து நிற்கிறார்.
இதனையடுத்து மோகனை திரைத்துறையில் இருந்த பல நடிகைகளும் ஒருதலையாக காதலித்து வந்துள்ளனர். அவ்வாறு தற்போது பாக்யராஜின் மனைவியாக இருக்கும் பூர்ணிமா அந்த காலகட்டத்தில் மோகனை ஒருதலையாக காதலித்திருக்கிறார். இதனை மோகனிடம் கூறவே அவர் மறுத்துவிட்டார்.
பிரபல நடிகையால் நடுதெருவுக்கு வந்த மைக்மோகன்
இதனால் ஆத்திரமடைந்த பூர்ணிமா, மோகனிற்கு எய்ட்ஸ் இருக்கிறது. பல பெண்களுடன் தகாத உறவில் இருக்கிறார். அவருடன் யாரும் நடிக்காதீர்கள் என்று வதந்தி கிளப்பி விட்டாராம். இந்த நடிகை சொன்ன வார்த்தையை நம்பி பத்திரிக்கையிலும் மைக் மோகனுக்கு எய்ட்ஸ் இருக்கு என்று அனைவரும் நம்பினார்கள், பின்னர் எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காமல் போனது.
இப்படி ஒரு நிலைமையில் தன் குடும்பத்தை விட்டு மைக் மோகன் யாரும் இல்லாத தனிமையில் தான் வசித்து வந்தாராம்,ஆனால் இப்போது வரை நன்றாகத்தான் ஆரோக்கியமாக உள்ளார் மைக் மோகன். இவரைக் குறித்து அப்போது பத்திரிக்கையில் வந்த எல்லா தகவலுமே வதந்தி பொய் என்று நிரூபித்து விட்டார்.