நாடகத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமாகி மிகப்பெரிய நடிகையாக உருவெடுத்தவர் மனோரமா. இவர் காமெடி, குணச்சித்திர வேடங்கள் என்று பல கதாபாத்திரங்களின் நடித்துள்ளார். இவரின் திரையுலக வாழ்க்கையில் பல மொழிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆர் காலம் தொட்டு சிவாஜி, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், கமல், ரஜினி, அஜித், விஜய், தனுஷ் என 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்த நடிகை என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவரை பலரும் ஆச்சி என்று அழைத்து வந்தனர்.
இவர் மிகப்பெரிய நடிகையாக இருந்திருந்தாலும் இவருடைய ஆரம்பகால வாழ்க்கை என்பது மிக மிக கடினமான ஒன்றாக தான் இருந்துள்ளது. மனோரமா தன் தாயின் கருவறையில் இருந்து இந்த உலகத்தை கண்ட அடுத்த நொடியில் இருந்தே அவருக்கான சவால்கள் காத்திருக்க துவங்கின. ரஜினிகாந்துடன் பல படங்களில் இணைந்து நடித்திருந்த மனோரமா, ரஜினிகாந்தை பார்த்து படுமோசமான வார்த்தைகளை பேசி விமர்சித்திருக்கிறார். அந்த சம்பவத்திற்கு பின் 6 மாதங்கள் சினிமாவில் வாய்ப்பில்லாமல் இருந்தார். ஆனால் ரஜினிகாந்த் இதுபற்றி மனோரமாவை பதிலுக்கு பதில் எங்கும் விமர்சித்து பேசியதில்லை.
மேடையில் சூப்பர் ஸ்டாரை படுகேவலமாக பேசி அசிங்கபடுத்திய ஆச்சி
அப்படி மனோரமாவின் கலை உலக பொன்விழாவிற்கு ரஜினிகாந்தை நேரில் சென்று சந்திக்காமல் போனில் சொன்னதை பொருட்படுத்தாமல் நிகழ்ச்சி சென்றார். அப்போது ரஜினிகாந்த் மேடையில், பில்லா படத்தின் சமயத்தில் ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது ஒருவர் பைத்தியம் பைத்தியம் என்று ரஜினியை கூறினார்கள். உடனே மனோரமா ஆவேசத்துடன் அங்கிருந்தவர்கள் கடுமையாக திட்டித்தீர்த்தார். மனோரமா பொன்விழா நிகழ்ச்சியில் அந்த சம்பவத்தை கூறி அன்று அனைத்த கை, எத்தனை முறை அடித்தாலும் நான் தாங்கிக்கொள்வேன் என்று ஆச்சி மனோரமாவை வாழ்த்தியும் வந்தார்.