விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யார்? நிகழ்ச்சியின் மூலமாக தனது நகைச்சுவை பாணியால் தமிழக மக்களிடையே நன்கு பரிட்சயமானவர் பாலா. அதனைத்தொடர்ந்து, அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.
காமெடியால் மட்டும் ஒருவரை சிரிக்க வைக்காமல், தன்னால் முடிந்தவரை பலருக்கு உதவிகள் செய்து, அவர்களை சிரிக்க வைக்கும் நல்ல மனம் கொண்டவர் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் வென்ற குளிர் சாதனை பெட்டியை கூட, ஒரு ஆதாரவற்றோர் இல்லத்திற்கு தான் வழங்கினார். அதே போல் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றையும் வாங்கி கொடுத்தார்.
தன்னுடைய தேவைக்கு அதிகமான பணத்தை சேர்த்து வைப்பதை விட அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக பயன்படுத்த வேண்டும் என்பதையே கொள்கையாக வைத்திருக்கும் பாலாவின், தங்கமான மனசுக்கு தான் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பது மட்டும் இன்றி, விஜய் டிவி-யில் தொகுப்பாளராக கலக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
சுத்திகரிப்பு நிலையம்
நடிகர் கே.பி.ஒய்.பாலா தனது ஊரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க கோரி கடந்த மாதம் டிசம்பர் மாதம் பொதுமக்கள் கையொப்பமிட்ட மனுவை அவரும் அவரது ஆதரவாளரான அமுதவாணனும் இணைந்து இன்று திறந்து வைத்தனர்.
பின்தங்கிய மக்களுக்கான நடைமுறை அரசாங்கமாக சேவையாற்றியதற்காகவும் பாராட்டுக்குரியவர்.செங்கல்பட்டு அடுத்த மேல்மருவத்தூர் அருகே கோட்டகயப்பாக்கம் கிராமத்திற்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு கருவியை சின்னத்திரை நடிகர் பாலா வழங்கினார்.