க்ரீத்தி ஷெட்டி
தெலுங்கில் வெளிவந்த உப்பெனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை க்ரீத்தி ஷெட்டி. அப்படத்தில் அவர் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் நடிகை க்ரீத்தி ஷெட்டி தி வாரியார், கஸ்டடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இவர், முதலில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாக இருந்த கொரோனா குமார் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக இருந்தார். ஆனால், அந்த படம் நடிகர் சிம்புவுக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் டிராப் ஆனது.
என்னடா இது முதல் திரைப்படமே இப்படி டிராப் ஆகிவிட்டது என்று கவலையில் இருந்தார். அதனை தொடர்ந்து அடித்தது ஜாக்பாட் என்று சொல்லும் வகையில் நடிகர் சூர்யா பாலா கூட்டணியில் உருவாக்கிக் கொண்டிருந்த வணங்கான் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமானார்.
ஆனால் யார் கண்ணுபட்டதோ தெரியவில்லை. நடிகர் சூர்யாவுக்கும் இயக்குனர் பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வணங்கான் திரைப்படமும் கைவிடப்பட்டது.
கீர்த்தி ஷெட்டி வயிற்றில் அடித்த பிரபல நடிகை
அதேபோல இயக்குனர் சுதாகர் கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ள அடுத்த படத்தில் நடிகை கீர்த்தி செட்டியை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட படக்குழு முடிவு செய்திருக்கின்றது.
ஆனால் கடைசி நேரத்தில் உள்ளே புகுந்த அதிதி ஷங்கர், கீர்த்தி செட்டி யின் வாய்ப்பை தட்டி பறித்திருக்கிறார். இதனால், எங்க இருந்து தான் வராங்களோ எனக்குன்னு.. என பொருமிக்கொண்டிருக்கிறாராம் கீர்த்தி ஷெட்டி.
இந்நிலையில், தற்போது நடிகர் சூர்யாவின் புதிய திரைப்படத்தில் நடிகை கீர்த்தி செட்டியின் வாய்ப்பை தட்டி பறித்திருக்கிறார் அதிதி சங்கர் என்ற தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.