ஜிவி பிரகாஷ்
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக, நடிகராக வலம் வரும் ஜிவி பிரகாஷ்குமார், தனது பள்ளித் தோழியும், தமிழ் சினிமாவின் பிரபல பின்னணிப் பாடகியுமான சைந்தவியை கடந்த 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு அன்வி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் அதனை விமர்சித்தும் வந்தனர். இந்த விமர்சனத்திற்கு பதிலளித்து ஜிவி பிரகாஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது,
பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்வுக்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல.
சங்கீதா சொன்னது..
இந்நிலையில், ஒரு பேட்டியில் சைந்தவி 8 ஆம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே ஜிவி பிரகாஷை காதலிக்க துவங்கியதாக்வும் 24 வருட பழக்கம். காதலிக்கும் போது இருவரும் தனியாகவே போனதில்லை என்றும் நண்பர்களோடு தான் போவோம் என்றும் கூறியிருந்தார்.
ஜிவி பிரகாஷ் இசையில் பல பாடல்களை பாடியிருக்கும் சைந்தவி, தெய்வத்திருமகள் படத்தில் விழிகளில் ஒரு வானவில் என்ற பாடலை பாடியதற்காக நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா பாராட்டியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
அதன்பின் சைந்தவிக்கும் சங்கீதாவுக்கும் இடையே நல்ல நட்பு உருவாகியதாம். பின் விஜய்யின் தலைவா படத்தில் யார் இந்த சாலை ஓரம் பாடலை ஜிவி பிரகாஷ் இசையில் சைந்தவி பாடியிருக்கிறார்.
அதற்கு விஜய் மனைவி சங்கீதா சைந்தவியை பாராட்டினாராம். தலைவா படத்திற்கு பின் தான் ஜிவி பிரகாஷ் – சைந்தவி காதல் எல்லோருக்கும் தெரிவந்திருக்கிறது. அப்படி 24 ஆண்டுகளாக இருந்த காதலில் இருந்து பிரிகிறார்கள் என்று கூறியதும் பல பிரபலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.