ஈரமான ரோஜாவே
விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் வரதட்சணை, சீர் வரிசை பிரச்சனையால் மலர் வெற்றி, புகழ் அகிலா ஆகிய ஜோடிகள் பிரிந்து பிறந்த வீட்டில் இருக்கிறார்கள். என்னதான் அவசர கல்யாணம், கட்டாய கல்யாணம் என்று இரு அக்கா தங்கைகள், இரு அண்ணன் தம்பிகளை கல்யாணம் செய்துகொண்டாலும், இரு ஜோடிகளும் இன்னும் சேர்ந்து வாழ ஆரம்பிக்கவில்லை.
இதில் மலர் வெற்றி ஜோடி கிட்டத்தட்ட காதலிக்கும் நிலைக்கு வந்துவிட, இடையில் இந்த சீர் வரிசை, வரதட்சணை, கடன் வாங்கியது என்று பிரச்சனை வந்துவிடுகிறது. இதனால் மாமியாரால் மருமகள்கள் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு இரண்டாவது சீசனுக்கு சொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை.
அப்படி முதல் சீசனில் திரவியம் மற்றும் பவித்ரா இணைந்து நடித்திருந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் திரவியத்தைத் தவிர மற்ற அனைத்து பிரபலங்களும் மாற்றப்பட்டு வித்தியாசமான கதை கலத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.
வைரல் புகைப்படம்
அந்த வகையில் சித்தார் தனது திருமண வரவேற்ப்பின் பொழுது நடன இயக்குனர் சாண்டி மற்றும் இப்பொழுது காவியாவாக ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்து வரும் கேப்ரியல்லா கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். சித்தார்த்தின் திருமணத்தில் குழந்தையாக கலந்துக் கொண்ட கேப்ரியல் தற்பொழுது வளர்ந்து அவருக்கே ஜோடியாக ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்து வருவது. ஆச்சரியமாக இருக்கிறது.