பாலா
தமிழ் திரையுலகில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. விக்ரம் நடிப்பில் வெளியான சேது திரைப்படம்தான் பாலா இயக்கிய முதல் திரைப்படம். வித்தியாசமான கதைக்களம், நடிப்பு, திரைக்கதை என சேது திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று மிகப்பெரும் வெற்றிபெற்றது.
சேது திரைப்படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் நந்தா, ஆர்யா நடிப்பில் நான் கடவுள் போன்ற மெகாஹிட் படங்களை கொடுத்தார் இயக்குனர் பாலா. நான் கடவுள் படம் பாலா இயக்கத்தில் வெளியான வித்தியாசமான படங்களில் ஓன்று.
இதுவரை பாலாவின் படங்கள் 6 தேசிய விருதுகள், 13 மாநில விருதுகள், 15 பிலிம் பேர் விருதுகளையும், 14 உலகளவிலான விருதுகளையும் பெற்றுள்ளது. தற்போது இவரது இயக்கத்தில் ‘வணங்கன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பாதி நிறைவடையும் நிலையில் உள்ளன.
அதிர்ச்சியை கொடுத்த பயில்வான்
இதற்கு காரணம் பாலா, சூர்யா இடையே கருத்து வேறுபாடும் சண்டையும் தான் காரணம் என்று கூறியுள்ளனர். அதன்பின் சூர்யாவின் ரோலுக்கு அதர்வா தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் சில மாதங்களுக்கு முன் இயக்குனர் பாலா பற்றிய உண்மையை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
அதில் இயக்குனர் பாலா, கதாநாயகி கீர்த்தி ஷெட்டி உட்பட சிலருக்கு மட்டும் கன்னியாக்குமரியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் நாகர்கோவில் பக்கமாக ஒரு ஓட்டலில் ரூம் புக் செய்துள்ளனர்.
இதனால் படப்பிடிப்புக்கு சீக்கிரமாக வருவதில் சிக்கலாகியுள்ளதாம். ஏன் ஹீரோவுக்கு மட்டும் தனியாக ரூம் புக் செய்துவிட்டு அவர்களுக்கு எவ்வளவு தொலை தூரத்தில் ரூம் புக் செய்திருக்கிறார் என்ற கேள்வியும் சூர்யா கேட்டிருக்கிறாராம்.
மேலும் பாலா கூறியதால் படத்திற்காக 25 லட்சம் செலவில் குடியிருப்பும் கட்டி ஷூட் முடிந்து அதை மீனவர்களுக்கு கொடுக்கும் பிளானை சூர்யா செய்திருந்தாராம். ஆனால் அந்த இடத்தில் ஷூட்டிங் வைக்க வேண்டாம் என்று பாலா அதிர்ச்சியை சூர்யாவுக்கு கொடுத்துள்ளார் என்ற செய்தியையும் பயில்வான் கூறியிருக்கிறார்.