பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகவும் நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை தீபிகா படுகோனே. கடந்த 2018ல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் தீபிகா படுகோனே ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படத்தில் படுமோசமான கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.
தற்போது ஷாருக்கான் – அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் ஜவான் படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்திற்கு பின்னர் அதிகமான பட வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம் என ஆசையில் உள்ளார் தீபிகா.
இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனே அளவுக்கதிகமாக போதை பொருள் மற்றும் மது அருந்தியதால் தலைக்கேரிய போதையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாலிவுட் சினிமா விமர்சகர் உமைர் சந்து ஒரு பதிவினை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.