நகைச்சுவை நடிகர் கருப்பு சுப்பையா
காமெடி நடிகர் கருப்பு சுப்பையா மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்தவர். கவுண்டமணியும் இவரும் சேர்ந்த கிட்டத்தட்ட 80 படங்களில் நடித்துள்ளனர். ஆரம்ப காலத்தில் பழனிச்சாமி, எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்து பின்னர் பிரபலமானார். அதனையடுத்து, பெரிய மருது, ஜல்லிக்கட்டு காளை, கட்டபொம்மன், செந்தூர பூவே, பட்டத்துராணி உள்ளிட்ட படங்களில் மெயின் ரோலில் நடித்திருந்தார். இறுதியாக கங்கையமரன் இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான தெம்மாங்கு பாட்டுக்காரன் படத்தில் நடித்து இருந்தார்.
ஜல்லிக்கட்டு காளை படத்தில் வரும் ஜம்பலக்கடி பம்பா ஆப்பிரிக்கா அங்கிள் என்னும் கேரக்டர், பெரிய மருது படத்தில் வரும் அண்டாவுக்கு ஈயம் பூசும் கேரக்டர், கட்டபொம்மன் படத்தில் ஆயிரம் மூட்டை நெல் அறுவை செய்யும் கேரக்டர் ஆகியவை மிகவும் பிரபலம் ஆனவை. அந்த காலத்தில் இரண்டு சுப்பையா இருந்தனர். அதில் இவர் கருப்பாக இருந்ததால் இவருக்கு கருப்பு சுப்பையா என பெயர் வந்தது. அதன் பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை.
நூறு ரூபாய் காசுக்காக உயிரை விட்ட காமெடி நடிகர் சுப்பையா
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பிரபல காமெடி நடிகர் கூறுகையில் கருப்பு சுப்பையா எல்லாம் ரூ.100 பணத்திற்காக உடல் முழுவதும் பெயிண்ட் அடிக்க சொன்னார்கள் என்று அழைத்து அடித்தார் அந்த பெயிண்ட் எல்லாம் அவருடைய உடலுக்குள் சென்று விட்டது அடுத்த நாளே அவர் இறந்துவிட்டார்’ என்று கூறியிருக்கிறார்.