தமிழ் திரையுலகில் 80-களில் நடித்த ஹீரோ, ஹீரோயின்களை நினைவில் இருக்கோ இல்லையோ? நகைச்சுவையின் ஜாம்பவனான காமெடி மன்னன், கவுண்டமனி, செந்திலை அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள்…
கரகாட்டக்காரன் படத்தில், ஒரு வாழைப்பழத்தை வைத்து இருவரும் செய்யும் காமெடி கலாட்டக்கள் எல்லாம் இப்போது வரை பெரிதாக பேசப்பட்ட ஒன்று.. அப்படியிருக்க, இவர்களின் திரைப்பயணத்தை பார்த்து ரசித்தவர்களுக்கு, அவரின் குடும்பத்தை பெரிதாக வெளியில் காட்டியதே இல்லை…
கவுண்டமனி சாந்தி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்… அவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர்.. இருவருக்கும் தன் தந்தையின் நினைவாக, கருப்பையா சுமித்ரா, கருப்பையா செல்வி என பெயர் வைத்துள்ளார்… தன் மகள்களை பெரிதாக அறிமுகப்படுத்தாத நிலையிலும், அவர்கள் மகள் சுமித்ரா செய்த செயலால், அனைவரும் ஆச்சர்யத்தில் வியந்து பார்த்துள்ளனர்…
அவர் மகள் சுமித்ராவும், அவரின் கணவரும் சேர்ந்து, சென்னை அடையாரில் உள்ள, ஒரு மருத்துவமனைக்கு, புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருவோர்க்கு, இவர்களால் முடிந்த உதவியை செய்து வந்துள்ளனர்.. கிட்டத்தட்ட ஒரு வருடமாக யார்? என்ற விவரங்களைக்கூட சொல்லாமல் உதவி செய்து வந்துள்ளனர்…
இப்போதேல்லாம்.. ரோட்டில் கிடந்த ஒரு முள்ளை எடுத்து ஓரமாக போட்டால் கூட அதை வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டு பெயர் எடுக்க முயற்சிப்போருக்கு மத்தியில் தான் யார் என்று கூட சொல்லாமல் இவர் செய்த வரும் சமூக சேவை மிகப்பெரியது அல்லவா… இப்போது கூட அவர்களாக இதை சொல்லவில்லை..
இவர்கள் உதவியால் பலனடைந்த குடும்பத்தில் இருப்பவர்கள், தங்களுக்கு யார் இந்த உதவியை செய்தது என்று தெரிந்துக் கொள்ள ஆசைபட்டதால், அவர்களிடம் தன் பெயர் சுமித்ரா என்று மட்டும் கூறியுள்ளார்… அதை வைத்து விசாரித்து பார்த்ததில் தான், அவர் கவுண்டமனியின் மகள் எனத் தெரியவந்துள்ளது… இதனால் இவருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், பாராட்டும் குவிந்துள்ளது… மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திடுங்கள்…