ஸ்ரீதேவி
50 ஆண்டுகளாக 5 மொழியில் திரைத்துறையை கலக்கியவர் ஸ்ரீதேவி. 1963ம் ஆண்டு சிவகாசியில் உள்ள மீனாம்பட்டி கிராமத்தில் பிறந்த ஸ்ரீதேவி, தனது 4 வயதில் கந்த கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1976-ஆம் ஆண்டு மூன்று முடிச்சு என்ற படத்தில் 13 வயதில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து ரஜினி, கமல் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்தார். இருவருடனும் இவர் நடித்த படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. தெற்கில் பிறந்து வடக்கில் கொடி நாட்டியவர் ஸ்ரீதேவி. தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ஸ்ரீதேவி, 2018ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி துபாயில் மரணமடைந்தார்.
பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளரான போனிகபூரை இரண்டாம் தாரமாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். போனிகபூருக்கு மோனா என்ற பெண்ணுடன் ஏற்கனவே திருமணம் நடைபெற்று அர்ஜுன் என்ற மகனும், அன்சுலா என்ற மகளும் இருந்தனர். ஸ்ரீதேவியை திரையில் கண்டதும் காதல் வசப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக பின் நாட்களில் போனிகபூரே கூறியுள்ளார்.
இயற்கை மரணம் கிடையாது
மேலும் இவரது இறப்பு குறித்து காவல் துறை பல விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் போனி கபூர் முதன் முறையாக ஸ்ரீதேவியின் மரணம் குறித்து சில உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளார். அதாவது நடிப்பிற்காக தனது உடல் எடை கட்டுக்குள் வைத்திருப்பதில் ஸ்ரீதேவி கவனம் செலுத்தினாராம்.
இதனால் அதிகமாக டயட் இருந்து குறைந்த ரத்த பிரச்சனையை சந்தித்தாராம். அதுவும் இவருடைய உணவில் உப்பை சேர்த்து கொள்ளும் படி மருத்துவர்கள் அவ்வப்போது வலியுறுத்தி வந்தார்களாம்.
ஆனால் அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை என போனி கபூர் கூறியுள்ளார். இதனால் ஸ்ரீதேவிக்கு இயற்கை மரணம் கிடையாது மேலும் அது தற்செயலாக நடந்தது என கூறியுள்ளார்.