பிக்பாஸ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 7. கமல் தொகுத்து வழங்கிவரும் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பிரதீப் ஆண்டனி. பரபரப்பு போட்டியாளராக திகழ்ந்து வந்த.
அவர் மீது மோசமாக பேசுகிறார், தூங்கவே பயமாக இருக்கிறது, டபுள் மீனிங் பேசுகிறார் என பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இந்த நிலையில் தொகுப்பாளரான உலகநாயகன் கமல், பெண்களின் பாதுகாப்பு கருதி அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார்.
ஆனால் அவர் வெளியேற்றப்பட்டது அநியாயம் என பிக்பாஸ் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். நடிகர் கமல் தீர விசாரிக்காமல் அவரை வெளியேற்றிவிட்டதாகவும், மீண்டும் பிரதீப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் வரவழைக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
ரசிகர்கள் ஷாக்
இந்நிலையில், பிரதீப் ஆண்டனி மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்களிடம் விசாரித்த போது, பிரதீப் ஆண்டனி மீண்டும் உள்ளே வந்தாலும், போட்டியாளராக வர முடியாது.. வேண்டுமென்றால் விருந்தினராக வந்து சில வாரங்கள் உள்ளே இருப்பார் என்று கூறுகின்றனர்.
இதனை அறிந்து ஷாக் ஆன ரசிகர்கள், அப்படியென்றால் பிரதீப் ஆண்டனி வெளியிலேயே இருக்கலாம் என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.