Connect with us

மும்பைல நான் தனியா இருந்தேன்..! கமல் பேசியும் கடுமையான கோபத்தில் பிக்பாஸ் ஜோவிகா..!

Jovika angry speech 1

சினிமா செய்திகள்

மும்பைல நான் தனியா இருந்தேன்..! கமல் பேசியும் கடுமையான கோபத்தில் பிக்பாஸ் ஜோவிகா..!

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் நடிகை விசித்ராவும், வனிதா மகள் ஜோவிகா விஜயகுமாரும் கல்வி பற்றி விவாதித்துக் கொண்டது தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசு பொருள் ஆகி உள்ளது.

Vanitha daughter jovika

இதில் விசித்ரா முன்வைத்த கருத்து என்னவென்றால், அடிப்படை கல்வி என்பது மிகவும் முக்கியமானது. அதனால் 12-ம் வகுப்பு வரை படித்து முடித்துவிடு என்று ஜோவிகாவுக்கு அட்வைஸ் பண்ணினார்.

Jovika Vijaykumar open talk

அவர் சொன்னது சரியான விஷயமாக இருந்தாலும், அதனை சொன்ன விதம் தான் தவறாக அமைந்தது. இதையடுத்து பேசிய ஜோவிகா தனது கல்வி பற்றி பேசவேண்டாம் என விசித்ராவிடம் கூறியும் அவர் திரும்ப திரும்ப பேசியுள்ளார். எனக்கு படிப்பு வரல அதனால் தான் நான் 9-ம் வகுப்போடு நிறுத்திவிட்டேன்.

Jovika bigboss

என்னைப்போல் ஏராளமான குழந்தைகள் இருக்கிறார்கள் இப்படி படிக்க சொல்லி வற்புறுத்துவதால் தான் நீட் மரணங்கள் நடைபெறுகின்றன என சொல்லி இந்த விஷயத்தை சென்சேஷன் ஆக்கினார் ஜோவிகா.

கோபத்தில் பிக்பாஸ் ஜோவிகா

ஒரு வாரம் நிறைவடையும் நிலையில் கமல் ஹாசன் போட்டியாளர்களிடையே கலந்துரையாடினார்.bவிசித்ரா மற்றும் ஜோவிகா விசயத்தில் பேசுகையில், நானும் படிக்காமல் இந்த இடத்திற்கு வந்ததாகவும் விசித்ரா கேரளா சூழ்நிலைக்கு ஏற்ப அப்போது படித்ததாகவும் இப்போது இருக்கு சூழ்நிலை வேறு என்று இருவருக்கு சமரசமாக பேசி புரிய வைத்தார்.

Vanitha Daughter jovika

அதன்பின் ஜோவிகா நான் படிக்க மாட்டேன் என்று கூறவில்லை. மும்பையில் நான் மட்டும் தனியாக் படித்து வாழ்ந்தேன் என்று கோபமாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top