சினிமாவில் நடிகைகள் பிரபலமாவது போலவே தொகுப்பாளினிகளும் சின்னத்திரையில் பிரபலம் ஆவார்கள்.அந்தவகையில் மிக முக்கியமான ஒரு தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.
டிடியை போல பல வருடங்களாக தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் அர்ச்சனா. பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி இருக்கிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பில் இருந்து ஜீ தமிழில் பணியாற்றிய அர்ச்சனா பிக்பாஸ் பிறகு விஜய் டிவி பக்கம் வந்தார், சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் இப்போது மீண்டும் ஜீ தமிழ் பக்கமே வந்துவிட்டார் அர்ச்சனா. சரிகமப சீசன் 3 நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இடையில் தொகுப்பாளினி அர்ச்சனா ஒரு சில காரணத்தால் தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்ததாகவும், பின் தனது மகள் சாராவால் அந்த முடிவை கைவிட்டதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
அப்படி கூறிய அர்ச்சனா தனது கணவர் மற்றும் மகளுடன் இணைந்து அழகிய கியூட் குடும்ப புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அழகிய குடும்பம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.