நடிகை அனன்யா பாண்டே
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சங்கி பாண்டே. இவரது மகள் அனன்யா பாண்டே. இவர் பாலிவுட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2’ என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
மேலும் அவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார். தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த லைகர் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் காலடி பதித்தார். மேலும் தற்போது அவரது கைவசம் 3 படங்கள் உள்ளதாம்.
நடித்தது ஐந்தே படத்தில் உச்சத்திற்கு சென்ற நடிகை அனன்யா பாண்டே 24 வயதில் பலருடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக இருந்தும் அவுட்டிங் சென்றும் வந்தது பெரியளவில் பேசப்பட்டது. தற்போது பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூருடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். சமீபத்தில் கூட அவர்கள் வெளிநாட்டில் ஊர் சுற்றும் புகைப்படம் லீக்கானது.
காரணம் அந்த நடிகரா
இந்நிலையில் நடிகை அனன்யா பாண்டே கர்ப்பமானதாகவும் அதை மும்பையில் இருக்கும் லீலாவதி மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துவிட்டதாகவும் பாலிவுட் சினிமா விமர்சகர் உமைர் சந்து அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆதித்யா ராயால் தான் அவர் கர்ப்பமானார் என்றும் கூறியிருக்கிறார்.