நடிகை ஐஸ்வர்யா
தொலைக்காட்சி தொடர்களில் கொடி கட்டி பறந்த ஒரு சில நடிகர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை. அந்த வகையில்தான் அண்ணாமலை தொடரில் நடித்து பல கோடி ரசிகர்களின் மனதில் குடியேறியவர் தான் நடிகை ஐஸ்வர்யா. மேலும் இத்தொடரில் அவருக்கு கொடுத்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதாவது இவர் போதை பொருளுக்கு அடிமையாக நடித்திருப்பார். இவருடைய நடிப்பு மற்றும் கதாபாத்திரம் ஆனது மிகவும் பாராட்டப்பட்டது.
இத்தொடருக்கு பின்னர் திரை உலகில் ஒரு சில திரைப்படங்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்து வந்தது. அந்தவகையில் இவர் ஒரு சில திரைப்படத்தில் தோன்றி இருப்பார். அதாவது ஏப்ரல் மாதத்தில் நடிகை சினேகா அவர்களுக்கு தோழியாகவும், மற்றும் ஜோதிகா அவர்களுக்கு தங்கையாகவும் ஒரு திரைப்படத்தில் நடித்திருப்பார். சிறு சிறு கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சரியாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் இவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு குட்பை சொல்லிவிட்டு குடும்பம் குட்டி என மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு வருகிறார்.
அண்ணா மலை சீரியல் நடிகை ஐஸ்வர்யாவா இது.?
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசிய ஐஸ்வர்யா, ‘நான் நடிப்பை விட்டு கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேல இருக்கும். என்னை ஞாபகம் வச்சு பேட்டி எடுக்க வந்ததுக்கு நன்றி. திருமணத்துக்குப் பிறகு துபாய்க்குப் போக வேண்டிய சூழல். அதனால, நடிப்புக்கு பிரேக் எடுத்துட்டு துபாய் கிளம்பினேன். அப்புறம் எனக்கு பையன் பிறந்தான். அவனைப் பார்த்துக்க வேண்டி இருந்துச்சு. இப்போ என் லைஃப் ஸ்டைலே மாறிடுச்சு. இப்போது கனடாவில் ‘சூப்பர் சிங்கர்’ மாதிரி ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். தற்போது ஒரு எஃப்.எம்மில், ஆர் ஜேவாகவும் இருந்து வருகிறேன்.