நடிகை ஹீரா ராஜகோபால்
தென்னிந்திய சினிமா திரை உலகில் 1990 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் நடிகை ஹீரா ராஜகோபால். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பல மொழி திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பு திறனை வெளிப்படுத்தி உள்ளார். மேலும்,நடிகை ஹீரா ராஜகோபால் அவர்கள் சென்னையில் பிறந்தவர். இவர் சென்னையில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் உளவியல் படிப்பை முடித்து பட்டம் பெற்றார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய உண்மையான பெயர் ஜனனி ராஜகோபால் ஆகும். இவருடைய அப்பா பெயர் ராஜகோபால். இவர் அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்தவர்.
மேலும் இவர் தமிழில் இதயம், நீ பாதி நான் பாதி, திருடா திருடா, சதிலீலாவதி, காதல் கோட்டை, அவ்வை சண்முகி என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்தார். இப்படிப்பட்ட நிலையில் கடைசியாக இவர் 1999ஆம் ஆண்டு சுயம்வரம் என்ற படத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு இவர் சினிமாவை விட்டு மொத்தமாக விலகி விட்டார் இதுவரையிலும் ஒரு திரைப்படங்களில் கூட நடிக்கவில்லை. இருந்தாலும் ரசிகர்கள் தற்பொழுது வரையிலும் இவரை ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.
காதல் கோட்டை படத்தில் நடித்த ஹீராவா இது
மேலும் சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் 51 வயது ஆகியும் கொஞ்சம் கூட அழகு குறையாமல் அப்படியே இருக்கிறாரே என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். தற்போது ஹீரா ஒரு N.G.O ஆரம்பித்து ஆதரவற்ற குழந்தைகள் உட்பட பலருக்கும் உதவி வருகிறார்.