ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. வயதானாலும் அழகும், எனர்ஜியும் குறையாத ரஜினிகாந்த் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். கிட்டத்தட்ட 179 படங்களில் நடித்துள்ள அவருக்கு பல திரைப்படங்கள் பெரும் வெற்றியில் அமைந்திருக்கின்றன.
தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர், லால்சலாம் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஞானவேல் ஆகியோரிடம் இணைந்து அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நேரு உள் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட ஜெயிலர் பட குழுவினர் மற்றும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இரண்டாம் திருமணமா.?
இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகளுடன் ஏற்பட்ட பிரச்சனை பற்றி பகிர்ந்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் சில தினங்களுக்கு முன் மாலத்தீவிற்கு செல்லும் போது மகள் ஐஸ்வர்யாவை உடன் அழைத்துச்செல்லவில்லை என்றும் ரஜினிக்கு அவர் மீது கோபம் இருப்பதால் தான் ஐஸ்வர்யாவை விட்டுச்சென்று விட்டார் என்றும் தெரிவித்திருக்கிறார்.
அதற்கு காரணம் தனுஷை பிரிந்திருக்கும் நிலையில் லால் சலாம் படத்தின் உதவி இயக்குனரை காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் ரஜினியிடம் கூறியதால் கோபத்தில் இருந்திருக்கிறார். அதனால் ஐஸ்வர்யாவை விட்டுவிட்டு சென்றிருக்கிறார் என்று கூறியிருக்கிறார். இதற்கு தற்போது பதிலடி கொடுக்கும் வகையில் ஐஸ்வர்யா, அப்பாவின் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் முடிந்ததும் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.