நடிகை வேதிகா
நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் முனி. சுமார் 11 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்கிரண் நடித்திருந்தார்.
இந்த படத்தில் ராகவா லாரான்ஸுக்கு ஜோடியாக நடிகை வேதிகா நடித்திருந்தார். முனி படம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து காஞ்சனா என்ற பெயரில் இதன் பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும் நடிகை வேதிகாவால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.
ஒப்பன் டாக்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இருவர் காதல் குறித்தும் அவர்கள் கலக்கும் உடலுறவு குறித்தும் பேசியிருக்கிறார்.
அவர் கூறியதாவது, காதல் என்பது ஆறு போல எந்த ஒரு தடைகளையும் பொருட்படுத்தாமல் அதனை தாண்டி சென்று கொண்டே இருக்க வேண்டும். எந்த ஒரு நிபந்தனைக்கும் காதலை உட்படுத்தக் கூடாது.
எனவே, ஏதாவது ஒரு நிபந்தனை காதலில் குறுக்கிட்டால்.. அந்த காதலை அவர்கள் முறித்து கொள்வது தான் இருவரின் எதிர்காலத்துக்கும் நல்லது. எனவே, நிபந்தனை இல்லாமல் காதலிக்க வேண்டும். அப்போதுதான் காதல் என்ற அந்த ஆறு உடலுறவு என்ற கடலில் சங்கமிக்க முடியும்.
உடலுறவிலும் எந்த ஒரு ஒளிவு மறைவோ நிபந்தனையோ இல்லாமல் இருக்க முடிகிறது என்றால் அதுதான் உண்மையான காதலின் வெளிப்பாடு.
தன்னுடைய துணையின் தேவையை புரிந்து கொண்டு அதனை ஒருவருக்கொருவர் பூர்த்தி செய்து கொள்வது தான் உடலுறவு என்பததுடைய தார்பரீகம். அதுவே ஒரு முழுமையான காதலாகவும் முழுமையான வாழ்க்கையாகவும் இருக்கும் என நான் நம்புகிறேன் என்று பேசி இருக்கிறார்