தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இப்படத்தினை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஷாலுடன் இணைந்து சண்டக்கோழி, விஜய் உடன் இணைந்து சர்க்கார் சசிகுமாருடன் இணைந்து தாரைதப்பட்டை போன்றவர்களுடன் நடித்து தமிழ் சினிமா தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
சமீப காலமாக சரியான கதைகள் இல்லாததால் வரலட்சுமி சரத்குமார் படங்களில் நடிக்காமல் இருந்து வந்ததால் உடல் எடையை அதிகரித்தது. இதனையடுத்து அவர் தற்போது உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போய் உள்ளார்.
ராதிகாவிடம் எகிறிய வரலக்ஷ்மி
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலுமே நடிகை வரலட்சுமி சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் ராதிகாவை நான் எப்போதுமே அம்மா என்று அளக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் எப்போதுமே எனக்கு ராதிகா அம்மாவாக முடியாது, எங்க அப்பாவின் இரண்டாவது மனைவி அவ்ளோ தான், நான் ஆன்டி என்று தான் அழைப்பேன்.
எனக்கு அம்மா என்னுடைய சொந்த அம்மா சாயா தேவி மட்டும் தான், எனக்கும் ராதிகா ஆண்டிக்கும் ஒரு நல்ல உறவு இருக்கு இதை பற்றி யார் வேணாலும் அப்படி வேணாலும் பேசுவார்கள் அதை பற்றி ஈக்கு கவலை இல்லை,
முக்கியமாக என்னுடைய கல்யாணம் என்பது என்னுடைய அம்மா எடுக்கும் முடிவு தான் என் கல்யாணத்தை மற்ற யாருமே முடிவு எடுக்க முடியாது, என்று நடிகை வரலட்சுமி தடாலடி பதிலை கூறியுள்ளார். இப்போது இந்த ஒரு பதிவு சமூக வலைதளத்தில் அதிகப்படியாக பேசப்பட்டு வருகிறது.