நடிகை கௌசல்யா
தமிழ் சினிமாவில் 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் கவுசல்யா. காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், பிரியமுடன், சொல்லாமலே, பூவேலி, உன்னுடன், ஏழையின் சிரிப்பில், வானத்தைப்போல, மனதை திருடிவிட்டாய் என்று அவர் நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடியது.
அவர் நடித்த படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை கவுசல்யா. இதுவரை தன்னுடைய நடிப்பு மற்றும் உடைகளில் கூட சற்றும் ஆபாசம் இல்லாமல் நடிக்கும் இவருக்கு இன்றும் பல ரசிகர்கள் உள்ளனர்.
நட்பே துணை படத்தில் ஆதிக்கு அம்மாவாக நடித்திருந்தார். அடுத்ததாக லைலா என்ற படத்திலும் அம்மா வேடத்தில் நடிக்கிறார் கவுசல்யா. பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கும் இந்த படத்தில் தானாநாயுடு கதாநாயகியாக நடித்துள்ளார்.
தீயாய் பரவிய புகைப்படம்
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அவரிடம் இடையில் திடீரென உடல் எடை கூடி காணப்பட்டீர்கள். அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவின.
ஆனால் பலரும் அதனை நம்ப மறுத்தனர். குண்டாக இருப்பது போல பரவும் உங்களுடைய புகைப்படங்கள் உண்மையா..? இது நீங்கள்தானா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
ஆமாம் அந்த புகைப்படத்தில் இருப்பது நான்தான் என ஒப்புக்கொண்டார் நடிகை கௌசல்யா. தொடர்ந்து பேசிய அவர் ஒரு கட்டத்தில் எனக்கு உடலில் சில பிரச்சினைகள் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் உடல் எடை கூடிய பிறகு தான் எனக்கு என்னுடைய உடல் நலத்தின் அவசியம் எனக்குப் புரிந்தது.
எனவே நிறைய பேரிடம் ஆலோசனை கேட்டு நல்ல மருத்துவரை அணுகினேன். அவர் என்னுடைய முழு உடலையும் பரிசோதனை செய்துவிட்டு எனக்கு நரம்பு சார்ந்த பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்தார்.