சுப்ரமணியபுரம் சுவாதி
சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுவாதி. சுப்ரமணியபுரம் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து தொடர்ச்சியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.சசிகுமாருடன் போராளி, ஜெய்யுடன் சில படங்களில் நடித்தவர் அதன்பிறகு தமிழில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. தெலுங்கில் தொடர்ச்சியாக நடித்துவந்த இவர், இறுதியாக கிருஷ்ணாவுக்கு ஜோடியாக யாக்கை என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு விமான ஓட்டுனர் விகாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு இந்தோனேஷியாவில் செட்டிலானார். திருமணம் முடிந்த கையோடு ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நடிகை ஸ்வாதி நீச்சல் உடையில் பேட்டி கொடுத்தார். இந்த புகைப்படங்களில் அப்பொழுது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. சினிமாவில் கூட இந்த அளவு கவர்ச்சியாக நடித்ததில்லை ஒரு சாதாரண ஒரு தொலைக்காட்சிப் பெட்டிக்கு நீச்சலுடையில் தோன்றுகிறாரே என்று கூட கேள்வி எழுபினர்கள் ரசிகர்கள்.
தீயாய் பரவும் தகவல்
தற்போது சமீபகாலமாக போட்டோஷுட் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுவரும் நடிகை சுவாதி தன்னுடைய கணவரை விட்டு பிரியப்போகிறார் எனும் தகவல் ஊடகங்களில் தீயாய் பரவிவருகிறது. ஆனால் இதற்கு நடிகை சுவாதி ரெட்டி அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது கணவர் விகாஸ் வாசுவை அவர் விவாகரத்து செய்ய இருக்கிறார் எனும் தகவல் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமற்ற இந்தத் தகவல் உண்மைதானா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.