வைஷ்ணவி அருள்மொழி
வைஷ்ணவி அருள்மொழி இவர் மதுரையில் பிறந்தவர். ஆரம்பத்தில் சிறு சிறு குறும்படங்களில் நடித்து வந்தார். சின்னத்திரையில் இவருக்கு மிகவும் பெயர் பெற்றுக்கொடுத்த ஒரு சீரியல் என்றால் அது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மலர் சீரியல் என்று கூறலா. அந்த சீரியலில் ஹீரோயினின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன்பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகு சீரியலில் நீவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இது இவருக்கு இன்னும் பிரபல பலத்தைக் கொடுத்தது. இவருக்கு தன்னுடைய அம்மா என்றால் உயிராம்.
இதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துவருகிறார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் இருந்த வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார் வைஷ்ணவி அருள்மொழி. நடிகர் சந்தானம் நடித்துள்ள சபாபதி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்துள்ளார்.
வெளிப்படையாக கூறிய சீரியல் நடிகை
தன்னுடன் நடிக்கும் சக நடிகர் விஜய் வெங்கடேசன் குறித்தும் படப்பிடிப்பு தள அனுபவங்கள் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றிய பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் அவர் தன்னுடைய ஜோடியாக நடிக்கும் விஜய் வெங்கடேசன் குறித்து கூறியதாவது விஜய் வெங்கடேசன் ஒரு சிறப்பான நடிகர். படக்குழுவுடன் ஒன்றினைந்து நடிக்கக்கூடிய ஒரு சிறப்பான மனிதர்.
எனக்கும் அவருக்குமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து முடித்து கட் சொன்ன அடுத்த நிமிடமே பயங்கரமாக சிரிப்பேன். என்னக்கா அவருடன் நடிக்கும் போது உங்களுக்கு ரொமான்ஸ் வரமாட்டேன் என்கிறது என்று படக்குழுவில் கேட்பார்கள்.
அவரை பார்க்கும் போது எனக்கு ரொமான்ஸ் மூடே வரவில்லை. அதனால் தான் ரொமான்ஸ் செய்ய முடியவில்லை என்று கூறுவேன். அதற்கு, விஜய் வெங்கடேசன் நீங்கள் ரொமான்ஸ் செய்ய வில்லை என்றால் என்ன நான் ரொமான்ஸ் செய்கிறேன் இல்லையா அது போதும் என்று கூறுவார் எனவும் பதிவு செய்துள்ளார்.