நடிகை ஸ்வாரா பாஸ்கர்
நடிகை ஸ்வாரா பாஸ்கர் 2009-ம் ஆண்டு வெளியான மாதோலால் கீப் வாக்கிங் சீரியல் மூலம் தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார்.
கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் தனுஷ், பாலிவுட்டில் ராஞ்சனா என்ற படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தார். இந்த படத்தில் ஸ்வாரா பாஸ்கர் இரண்டாவது கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு பிலிம் பேர் விருது கிடைத்தது.
தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை ஸ்வாரா பாஸ்கர் சமாஜ்வாடி கட்சியின் இளைஞரணி தலைவர் ஃபஹத் அகமதுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில், ஸ்வாரா தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை கடந்த மே மாதம் புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்தார். இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வாழ்த்து மழை பொழிந்தனர்.
வைரலாகும் போட்டோஸ்
இந்நிலையில் செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி தனக்கு அழகான பெண் குழந்தை பிறந்ததாக இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்டார். அதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் சில நெட்டிசன்கள் உங்களுக்கு பிப்ரவரி மாதம் தான் திருமணம் ஆனது. 7 மாதங்கள் கூட ஆகாமல் அதற்குள் எப்படி குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தீர்களா? என கேள்வி கேட்டு வருகின்றனர்.