நடிகை ஸ்ரீதேவி அசோக்
நடிகை ஸ்ரீதேவி அசோக், கிழக்கு கடற்கரை சாலை, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நெடுந்தொடர்களில் களமிறங்கி அசத்தி வருகிறார்.
செல்லமடி நீ எனக்கு என்ற நெடுந்தொடர் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ஸ்ரீதேவி, தற்போது விஜய் தொலைக்காட்சியில் பொன்னி தொடரில் நடித்து வருகின்றார்.
இவருக்கு கடந்த 2022 ஆம் வருடம் அசோக் என்பவருடன் திருமணம் நடந்தது. சமீபத்தில் தான் இவர் 2வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சில போட்டோ ஷூட்களை வெளியிட்டார். இதன் காரணமாக, அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தற்போது இவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்து உள்ளது. குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.