நடிகை சோனியா அகர்வால்
இயக்குனர் செல்வராகவன் இயக்கிய “காதல் கொண்டேன்” படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் சோனியா அகர்வால். இதனை தொடர்ந்து இவர் மதுர, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, திருட்டு பயலே போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை சோனியா அகர்வால் பிரபல இயக்குனராக இருக்கும் செல்வராகவனை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வாழ்க்கை 2010 வரைக்கும் மட்டும் தான் நீடித்தது.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரமாக பேசி பின்பு விவாகரத்தும் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் எழுத்தாளராக இருந்த செல்வராகவன் தனுஷ் அறிமுகமான துள்ளுவதே இளமை என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் இயக்குனராக ஆனார்.
ஒப்பனாக பேசிய சோனியா அகர்வால்
காதல் கொண்டேன் படத்தில் நான் நடிக்க வந்தபோது என்னுடைய அம்மா என்னுடன் இருந்தார். படப்பிடிப்பு தளத்தில் தனுஷின் தோற்றத்தையும் வேடத்தையும் பார்த்த என்னுடைய அம்மாவுக்கு தனுஷை சுத்தமாக பிடிக்கவில்லை.
ஏனென்றால் அந்த நேரத்தில் அம்மாவால் அப்படிப்பட்ட திரைப்படங்களை உள்வாங்க முடியவில்லை. முதல் நாளே படப்பிடிப்பு தளத்தில் மிகவும் டென்ஷனாக இருந்தார் என்னுடைய அம்மா. செல்வராகவனுக்கு எல்லாமே கச்சிதமாக இருக்க வேண்டும். சிறு தவறு நடந்தால் கூட கடுமையாக கோபப்படுவார்.
எனக்கும் அதனால் கோபம் வந்துவிடும். அப்போதெல்லாம் சமாதானம் கூட செய்ய மாட்டார். ஆனால் நடிகர் தனுஷ் என்னிடம் வந்து அமைதிப்படுத்தி இருக்கிறார். என்னுடைய கோபத்தை குறைத்து இருக்கிறார். அதைப்பற்றி கவலைப்படாதீர்கள் என்று சொல்லும் குணம் அவரிடம் இருக்கிறது. ஆனால், செல்வராகவனிடம் அது கிடையாது என பேசியிருக்கிறார்