நடிகை சோனியா அகர்வால்
இயக்குனர் செல்வராகவன் இயக்கிய “காதல் கொண்டேன்” படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் சோனியா அகர்வால். இதனை தொடர்ந்து இவர் மதுர, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, திருட்டு பயலே போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை சோனியா அகர்வால் பிரபல இயக்குனராக இருக்கும் செல்வராகவனை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வாழ்க்கை 2010 வரைக்கும் மட்டும் தான் நீடித்தது.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரமாக பேசி பின்பு விவாகரத்தும் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் எழுத்தாளராக இருந்த செல்வராகவன் தனுஷ் அறிமுகமான துள்ளுவதே இளமை என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் இயக்குனராக ஆனார்.
குடும்பமே சேர்ந்து என் முன் இதை செய்தார்கள்
இந்நிலையில், எதனால் விவாகரத்து நடந்தது என்று சோனியா அகர்வால் தன்னுடைய தரப்பு விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார். முதலில் நடிகை சோனியா அகர்வால் என்ன காரணம் கூறுகிறார் என்றால், திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்க கூடாது என்று செல்வராகவன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனக்கு கட்டளையிட்டனர்.
இதனால் ஒரு ஆண்டுக்கு மேலாக நான் சினிமாவில் நடிக்காமல் இருந்தேன். சினிமாவில் நடித்துவிட்டு திடீரென வீட்டிற்குள்ளேயே இருப்பது எனக்கு பைத்தியம் பிடிப்பது போல இருந்தது என கூறி இருக்கிறார்.
இதனால் நடிகை குஷ்பூ நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்த ஒரு சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு மீண்டும் ஒட்டு மொத்த குடும்பமும் என்று முன்பு நின்றுகொண்டு ஒன்று நடிப்பதை நிறுத்து.. அல்லது விவாகரத்து கொடுத்து விட்டு சென்று விடு.. இதெல்லாம் எங்களுடைய குடும்பத்திற்கு சரிப்பட்டு வராது என டார்ச்சர் செய்தார்கள்.
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் கணவரை பிரிந்து விட்டு வந்து விட்டேன் என தெரிவித்துள்ளார் சோனியா அகர்வால்.