நடிகை சினேகா
2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.
பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது.
அதிரடி பதில்
சினேகா நடிக்கும் படங்கள் முழுவதும் குடும்பபாங்கான சித்திரங்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல், கவர்ச்சியை அதிக அளவு வெளிப்படுத்தாமல் குடும்பப் பாங்கான பெண்ணாகவே பல படங்களில் நடித்திருப்பார். அந்த வகையில் இவர் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடிப்பதற்கு முன்பு சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்.
அந்த கட்டுப்பாட்டுக்கு ஓகே என்றால் மட்டும் தான் இந்த படத்தில் நடிப்பேன் என்பதை ஆணித்தனமாக கூறி இருக்கக்கூடிய விஷயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கமலோடு இணைந்து நடிக்க முதன்முறையாக சினேகா ஒப்பந்தம் செய்யப்பட்ட போது சில கண்டிஷங்களை சினேகா போட்டிருக்கிறார்.
அதில் உதட்டோடு உதடு பதித்து முத்தம் தரக்கூடிய காட்சி இருக்கவே கூடாது என்ற நிபந்தனையை விதித்தார். இதற்குக் காரணம் கமல் படம் என்றாலே உதட்டோடு உதடு பதித்து முத்தம் தருவது போல் காட்சிகள் கட்டாயம் ஒன்று இரண்டு வைக்கப்படும் என்பதால் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்திலும் அப்படி ஒரு காட்சியை வைத்து விட்டால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே ஆலோசனை செய்து இந்த கண்டிஷனை போட்டு இருக்கிறார்.