நடிகை சினேகா
2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.
பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது.
டான்ஸ் ஜோடி டான்ஸ்
இந்நிலையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் மிகவும் கஷ்டப்பட்டு வரும் போட்டியாளரான சுரேஷ் என்பவரின் ஆட்டத்தை பார்த்து வியந்திருக்கிறார் நடிகை சினேகா. என் வீட்டிற்கு கூட்டிச்சென்ற் விருந்து வைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். வார்த்தையில் தான் சொல்கிறார் என்று பார்த்தால் சினேகா, சுரேஷை ஈசிஆரில் இருக்கும் தன் வீட்டிற்கு கூட்டிச்சென்று தரமான உணவுகளை பரிமாறியிருக்கிறார்.
கண்கலங்கிய போட்டியாளர் சுரேஷ் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் கசிய, சினேகா டி நகரில் ஆரம்பித்திருக்கும் சேலை கடையின் விளம்பரத்திற்காக தான் இப்படியெல்லாம் செய்கிறார் என்று சிலர் விமர்சித்து இருக்கிறார்கள்.
உண்மையில் அவர் இதை வைத்து விளம்பரம் செய்கிறர் என்றால் 100 புடவையை கொண்டு போய் ஏழை மக்களுக்கு வாரி வழங்கிவிட்டு வரலாம், அவர் அப்படி செய்யவில்லை, இதனை ஆத்மாத்தமாக தான் செய்துள்ளார் என்று விமர்சகர் செய்யாறு பாலு ஆதரவாக பேசியிருக்கிறார்.