நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா
சன் டிவியில் 2010 முதல் 2015 வரையில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல் ஆன நாதஸ்வரத்தில் ராகினி கேரக்டரில் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா நடித்திருப்பார். அவருக்கு கடந்த வருடம் 2022 ஜனவரி மாதம் தான் எங்கேஜ்மென்ட் முடிவடைந்தது. அதை தொடர்ந்து அவருடைய திருமணம் சில மாதங்கள் கழித்து நடை பெற்றது.
திருமணத்திற்கு பிறகு ஸ்ருதி தன்னுடைய கணவரோடு அதிகமான புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருப்பார். தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவரின் கணவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்திருக்கின்றது.
பாடி பில்டர் மட்டுமல்லாமல் தனியாக உடற்பயிற்சி கூடம் ஒன்றையும் நடத்தி வந்திருக்கிறார். சுதீஷ் சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் ஏற்கனவே மிகவும் உடல் வலிமையான ஒருவர் கடினமான உடற்பயிற்சிகளை செய்யக்கூடியவர் உடலை பிட்டாக வைத்திருக்கக் கூடிய 2022-ம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு
டைட்டில் அடித்த.. அரவிந்த் சேகர் இதய அடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்றால் நம்பவே முடியவில்லை. இவருடைய இறப்புக்கு என்ன காரணம்..? பாடி பில்டிங் செய்வதற்காக ஸ்டிராய்டு போன்ற மருந்துகளை எடுத்துக் கொண்டாரா.? உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் இணைய பக்கங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இறந்த கணவர்… கேக் வெட்டி கொண்டாட்டம்:
ஆம் தனது கணவர். இறந்துவிட்ட நிலையில் தனது கணவர் இல்லாமலே இரண்டாவது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டால் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ” முதல் முறையாக நீ இல்லாமல் திருமண நாளை கொண்டாடுகிறேன். நீ என் பக்கத்தில் இருப்பதற்காக தான் நான் உணர்கிறேன் .
இந்த உலகம் நீ இல்லாத திருமண நாளை கொண்டாடுவதாக என்னை கேலி செய்தாலும் என் பக்கத்தில் இருப்பது போல நான் நினைத்துக் கொள்கிறேன். நீ எப்போதும் என் அருகில் தான் இருப்பாய் என்று முழுமையாக நம்புகிறேன் என மிகவும் எமோஷனலாக பதிவிட்டு இருக்கிறார் ஸ்ருதி. இந்த பதிவு ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.