நடிகை ஸ்ருதிகா
தேங்காய் சீனிவாசனின் பேத்தி தான் நடிகை ஸ்ருதிகா, இவருக்கு சினிமா பின்புலம் இருப்பதால் தனது 13 வயதிலேயே சினிமா வாய்ப்புகளை பெற்றார், ஆனால் ஸ்ருத்திகாவின் பெற்றோர் என்னுடைய மகளுக்கு சிறுவயது ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு அவருக்கு மெச்சூரிட்டி கிடையாது அதனால் நடிக்க அனுப்ப மாட்டேன் என மறுத்து விட்டார்கள்.
அதனைத்தொடர்ந்து தன்னுடைய 14வது வயதில் நடிகர் சூர்யா நடித்த ஸ்ரீ திரை படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார், அதனைத் தொடர்ந்து ஆல்பம் என்ற திரைப்படத்தில் நடித்த ஸ்ருதிக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின, ஆனால் பட வாய்ப்புகளை நிராகரித்து வந்தார் ஸ்ருதிகா.
பின்பு தமிழில் நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் மாதவன் நடிப்பில் வெளியாகிய நளதமயந்தி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார், இதனைத்தொடர்ந்து அடுத்ததாக தமிழில் தித்திக்கிற என்ற திரைப்படத்திலும் நடித்தார் பின்புதான் படைக்க வேண்டும் என நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
இதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து இவர் விஜய் டிவியில் நடைபெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரீ என்ரீ கொடுத்தார். அப்போதே ரசிகர்கள் இவரைப் பார்த்து திருமணம் ஆகியும் மாறாத அழகு இளமையோடு இருப்பதை பார்த்து மேலும் இவரின் வெகுளித்தளமான பேச்சு இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
ஓபன் டாக்
இதன்பின் மிஸ்டர் மிஸ்சஸ் சின்னத்திரை 4, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சப்போர்ட்டராகவும் இருந்து வரும் ஸ்ருத்திகா தனிப்பட்ட விசயத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில் திருமணம் நடக்கும் வரைக்கும் நான் ஆபாச படம் பார்த்ததில்லை என்றும் திருமணத்திற்கு பின் தன் கணவர் அர்ஜுன் நீ ப்ளூ ஃபிலிம்ஸ் பார்க்க வேண்டும் என்று கூறிவிட்டு அப்படத்தை காண்பித்தார். அதை பார்த்தவுடன் வாந்தி எடுத்ததாக ஸ்ருத்திகா கூறியிருக்கிறார்.