நடிகை ஷகீலா
மலையாளத்தில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் ஷகிலா. இவர் தமிழ் படங்களில் சில குணசித்ர கதாபாத்திரத்திக் நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஷகிலாவை கவர்ச்சி நடிகையாக பார்த்து வந்த சிலர் இந்த நிகழ்ச்சிக்கு பின் ஷகிலா அம்மா என்று பல பேர் அழைத்தனர். இதை அவரை பல பேட்டியில் கூறியுள்ளார்.
அதோடு, ஒரு திருநங்கையையும் அவர் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும், யுடியூப் சேனல்களில் சர்ச்சையில் சிக்குபவர்களை பேட்டியும் எடுத்து வருகிறார். ஷகீலா நடித்த கின்னாரா தும்பிகள் என்ற படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
அந்த சமயத்தில் ஒரு கவர்ச்சி நடிகையின் படம் எப்படி 100 நாட்கள் ஓடியது என்றுதான் ஆச்சரியப்பட்டார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி ஷகீலாவுக்கும் அதை நினைத்து ரொம்பவே ஆச்சரியம்தான் பட்டார்.
ஓப்பனாக பேசிய
தற்பொழுது புதிதாக நெட்ஃபிளிக்ஸ் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த சீரிஸின் ப்ரோமோவில் பேசிய நடிகை ஷகிலா உடலுறவு என்பதில் சில முக்கியமான விஷயங்கள் இருக்கிறது.
ஒருவருடைய சம்மதம் இல்லை என்றால் அவரை வற்புறுத்தக் கூடாது. ஒருவேளை அதற்கு சம்மதம் தெரிவித்து உடலுறவின் போது அவருக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்படுகிறது என்றால் கொடுத்து சம்மதத்தை திரும்பப்பெறும் உரிமையையும் தங்களுடைய துணைக்கு வழங்க வேண்டும். இதுதான் சிறப்பான உறவாக இருக்கும்.
மேலும், திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணத்திற்கு பிறகு கருத்தரிக்க வேண்டாம் என்ற நிலையில் கண்டிப்பாக பாதுகாப்பு முக்கியம் என கையில் ஆணுறையை தூக்கி காட்டி பேசும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
அதேபோல ஆபாச படங்களில் வருவது போல அரை மணி நேரம் முக்கால் மணி நேரம் என்ற கதை எல்லாம் போலியானது. 2 நிமிடம் என்றாலும் சரி இருவரும் மகிழ்ச்சியை எட்டிவிட்டீர்கள் என்றால் அதுதான் சிறப்பான உடலுறவு என்று கூறியிருக்கிறார்