நடிகை சீதா
தமிழ் சினிமாவில் 80ஸ் காலக்கட்டங்களில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் நடிகையாக வலம் வந்தவர். கோலிவுட் திரையுலகில் 1985 ஆம் வருடம் ‘ஆண்பாவம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதன் பின்பு பல நடிகர்களுடன் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து மக்கள் மனதை கவர்ந்த நடிகையாக இன்றும் இருந்து வருகிறார். இவர் நடிகர் பார்த்திபன் இயக்கி, நடித்த புதிய பாதை என்ற படத்தில் நடித்தபோது இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டது. ஆனால், சீதாவின் வீட்டில் இவர்களது காதலை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அவர்கள் வீட்டை விட்டு வெறியேறி, கடந்த 1989 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
பின்பு இயக்குநர் பார்த்திபன் சீதா தம்பதியர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ஆனது.இதனை அடுத்து சதீஷ் என்ற நபரை மறுமணம் செய்து கொண்டால் அந்த திருமண வாழ்க்கையும் சரியான முறையில் அமையாததன் காரணத்தால் அவரையும் விவாகரத்து செய்து விட்டார்.
ரேப் பண்ணவன் கூடவே வாழலாம்-ன்னு ஓகே சொல்லிட்டேன்
இந்நிலையில், தன்னுடைய முதல் திரைப்படமான புதிய பாதை குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார் நடிகை சீதா. நடிகர் பார்த்திபன் புதுமுகமாக புதிய பாதை படத்தை இயக்க வந்த போது, நான் அதில் நடிக்க சம்மதிக்க காரணம் இருந்தது. ஒருவன் ஒரு பெண்ணை கற்பழித்துவிடுகிறான், அவனோடு அந்த பெண் சேர்ந்து வாழ்கிறாள் என்பது தான் கதையாக இருந்தது. கற்பழித்தவனுடன் வாழ வேண்டும் என்கிற கதை அப்போதைய காலகட்டத்தில் புதிதாக இருந்தது. அதே சமயம் வித்தியாசமாக இருந்தது. நாம் நடித்தால் நல்லா இருக்கும் என தோன்றியது. எனவே, அதில் நடிக்கலாம் என முடிவு செய்தேன். படமும் வெளியானது. ஒரு வித பயமும் எனக்குள் இருந்தது. ஆனால், ரசிகர்கள் அதற்கு பயங்கரமாக பாராட்டை கொடுத்தனர். படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. நான் நடித்திருந்த அந்த கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது.