நடிகை சந்தியா
சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ என்ற ஹிட்டான சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை சந்தியா ஜகர்லமுடி. இதில் முன்னணி நடிகை ராம்யா கிருஷ்ணனுடன் இனைந்து நடித்திருந்தார்.
இந்த சீரியலில் மட்டுமல்லாமல் சந்திரலேகா என்ற சீரியலிலும், பேய்கள் ஜாக்கிரதை என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது தெரு நாய்களை பாதுகாத்து வரும் பணியை சந்தியா செய்து வருகிறார். அண்மையில் பிரபல யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்த இவர் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு கசப்பான நிகழ்வு குறித்து பேசியுள்ளார்.
ஓப்பனாக கூறிய நடிகை சந்தியா
எதிர்பாராத விபத்து ஒன்றில் தனக்கு நேர்ந்த அத்து மீறல் குறித்து வேதனையுடன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். அந்த பேட்டியில், ‘கடந்த 2006 ஆம் ஆண்டு ஒரு சீரியலுக்காக கோயில் யானை ஒன்றுடன் ஷூட் எடுத்த போது அது என்னை தாக்கியது. யானை தாக்கியதில், ஏழு இடங்களில் எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
மயங்கி விழுந்த நான் இறந்து விட்டேன் என்றே அங்கிருந்தவர்கள் முடிவு செய்து விட்டார்கள். ஆனால் என்னை டான்ஸார்கள் தூக்கிச் செல்லும் போது அதில் ஒரு டான்ஸர், என் மார்பில் கை வைத்து அத்து மீறினார்.
பிணம் போல் இருந்த என் மார்பில் கைவைத்தவர் யார் என்று தெரியவில்லை, அப்போது கூடவா அதை செய்வார்கள் என்று கூறியிருக்கிறார். இதை என் அம்மாவிடம் கூட கூறியதில்லை அதிலிருந்து மீண்டு வர நீண்டநாட்கள் ஆனதாக கண்கலங்கி கூறியிருக்கிறார் நடிகை சந்தியா.