நடிகை சமந்தா
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் இவர் சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக
பணியாற்றி இருக்கிறார். தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
இதற்கிடையில் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார். பின் சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும்,
இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் என பல சர்ச்சைகள் எழுந்த வந்த நிலையில் இருவரும் பிரிவதாக தங்கள் சமூக வலைதளத்தில் அறிவித்து இருந்தனர். இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது.
தாறு மாறு கிளாமர் போஸ்
அந்த வகையில் தற்போது தீபாவளிக்கு விற்பனை சூடு பிடிக்கக்கூடிய வகையில் இவர் போட்டிருக்கும் கவர்ச்சிகரமான புடவை போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
பிங்க் நிறத்தில் இருக்கும் இந்த புடவையை பலரும் விரும்பக்கூடிய வகையில் இவர் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் இளசுகளில் மனதை ரணகளத்தை ஏற்படுத்தி விட்டது.
வியாபாரத்தோடு நின்று விடாமல் மீண்டும் பல புதிய படங்களில் நடித்து இன்னும் பல விருதுகளை வாங்க வேண்டும் என சமந்தாவின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவுகளை தெரிவித்து வருவதோடு இவரின் புதிய படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் எனக் கூறலாம்.