ரேகா நாயர்
சின்ன திரையில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேகா நாயர். பல காலங்களாக இவர் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பல பேட்டிகளில் இவர் தொடர்ந்து சினிமா குறித்து பல சர்ச்சையான விஷயங்களை வெளியிட்டு வருகிறார். சினிமாவில் பெண்களுக்கு இருக்கும் அவல நிலை குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இவர் சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரின் இந்த துணிச்சலான நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், அதே நேரத்தில் எதிர்ப்புகளும் வந்த வண்ணம் இருந்தன.
குறிப்பாக ரேகா நாயரின் நடிப்பை சினிமா பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
படுத்துட்டு 10 வருஷம் கழிச்சு கூப்பிடுறாங்க:
அதிலும் வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து விட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து அந்த இயக்குனர் தயாரிப்பாளர் மீண்டும் படுகைக்கு கூப்பிடுவது எந்த விதத்தில் நியாயம்? எனக் கோபமாக பேசி இருக்கிறார்.
ரேகா நாயர் இப்படி மறைமுகமாக சினிமா துறையில் நடக்கும் பல அம்பலமான விஷயங்களை பொதுவெளியில் போட்டு உடைத்து இருப்பதால் ரேகா நாயர் சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டு வருவதோடு பொதுமக்களையும் விழிப்பிதுங்க வைத்துள்ளார்.