ரேகா நாயர்
சின்ன திரையில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேகா நாயர். பல காலங்களாக இவர் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பல பேட்டிகளில் இவர் தொடர்ந்து சினிமா குறித்து பல சர்ச்சையான விஷயங்களை வெளியிட்டு வருகிறார். சினிமாவில் பெண்களுக்கு இருக்கும் அவல நிலை குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இவர் சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரின் இந்த துணிச்சலான நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், அதே நேரத்தில் எதிர்ப்புகளும் வந்த வண்ணம் இருந்தன.
குறிப்பாக ரேகா நாயரின் நடிப்பை சினிமா பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
வெளிப்படையாக விளாசிய..
அத்தோடு ஆண் நண்பர்கள்.. காதலன் என சேர்ந்து கொண்டு மது அருந்தும் பெண்மணிகளை வெளிப்படையாக விளாசியுள்ளார் நடிகை ரேகா நாயர்.
இதனை அடுத்து இந்த விஷயமாகவே தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு நாகரீகத்தின் பெயரில் நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களில் கூட இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்று சொல்லி வருகிறார்கள்.