நடிகை ரெஜினா
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரெஜினா. அதை தொடர்ந்து அவர் மாநகரம், சரவணன் இருக்க பயமேன் என தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
மேலும் இவர் கன்னடம், தெலுங்கு என பல மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்ரா,கசட தபற உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
நடிகை ரெஜினா எப்போதும் தனது உடலை கட்டுக்கோப்பாக பராமரித்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதனால் அவர் எப்பொழுதும் சுறுசுறுப்பான, கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவார்.
கசப்பான அனுபவத்தை கூறிய நடிகை ரெஜினா
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரெஜினா சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறுகையில், என் சினிமா வாழ்க்கையில் ஒரு முறை தான் அட்ஜஸ்ட்மென்ட் தொடர்பான அனுபவத்தை சந்தித்து இருக்கிறேன்.
எனக்கு ஒருவர் அலைபேசியில் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்டார். ஆனால் அப்போது எனக்கு புரியவில்லை. நான் சம்பளத்தை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்கிறார் என்று நினைத்தேன். பின்னர் தான் எனக்கு தெரியவந்தது இது வேறு வகையான அட்ஜஸ்ட்மென்ட் என்று. அந்த சமயத்தில் எனக்கு வயது 20 தான் என கூறியுள்ளார் ரெஜினா.