நடிகை ராதா
1980 மற்றும் 90களில் ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ராதா. அவர் முன்னணி நடிகை அம்பிகாவின் சகோதரி ஆவார்.
ராதா கமல் ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் ராதா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியின் நடுவராகவும் பொறுப்பேற்றிருந்தார். நடிகை 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறி உள்ளார்.
இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர். மேலும் மகள்கள் கார்த்திகா துளசி இருவரும் சில திரைப் படங்களில் நடித்துள்ளனர். ஆனால் அதனை தொடர்ந்து அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
ஓப்பன் டாக்
சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்ட நடிகை ராதா தற்போது நீங்கள் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தால் யாருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசைப்படுவீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
நடிகர் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்று ஆசை இருக்கிறது. நடிகர் கார்த்தி மீது எனக்கு கிரஷ் கிடையாது. ஆனால், அவருடைய நடிப்பு அவருடைய கதை தேர்வுகள் எல்லாம் வித்தியாசமாக இருக்கிறது.
அதனால் கண்டிப்பாக கார்த்தி உடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுவேன். அதன் பிறகு நடிகர் சூர்யாவுடன் சென்டிமென்ட் காட்சிகளில் அவருடைய நடிப்புக்கு நிகராக நானும் நடிக்க ஆசைப்படுவேன். இப்படி நிறைய நடிகர்களை சொல்லலாம் என கூறியிருக்கிறார்.