பிரியங்கா மோகன்
கடந்த 2019 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து நடிகர் நாணி நடிப்பில் வெளியான நானிஸ் கேங் லீடர் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
அடுத்தடுத்த வெற்றி படங்கள் காரணமாக தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. முதல் முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இயக்குனர் நெல்சன் இயக்கிய எந்த திரைப்படம் தமிழ் திரை உலகில் ஒரு மாபெரும் வெற்றியை தந்ததால் நடிகை பிரியங்கா மோகன், சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இதனை அடுத்து மீண்டும் இவர் சிவகார்த்திகேயனோடு இணைந்து டான் என்ற படத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அனல் பறக்குது
இந்நிலையில், முதன்முறையாக வெப் சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ள இந்த வெப் சீரிஸில் இன்னும் சில முன்னணி நடிகைகள் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
கிரைம் திரில்லர் ஜானரில் உருவாக உள்ள இந்த வெப் சீரிஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.அனல் பறக்கும் இந்த வெப் சீரிஸில் நீச்சல் உடையில் நடிப்பதற்காக பிரியங்கா மோகனுக்கு கோடிகளில் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
ஆனால் இது குறித்து வெப் சீரிஸ் குழுவோ அல்லது பிரியங்கா மோகன் தரப்பு எந்த ஒரு அதிகாரப்பூர் அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.