பிரிகிடா சாகா
யூடியூப் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரிகிடா. இவர் பிளாக்ஷிப் யூடியூப்பில் வெளியான ஆஹா கல்யாணம் என்கிற வெப் தொடர் மூலம் தான் பிரபலமானார்.
அந்த தொடரில் இவர் பவி டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சேலையில் செம்ம ஹோம்லி லுக்கில் தன் அழகான நடிப்பால் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார் பிரிகிடா.
நடிகை சாய் பல்லவியை எப்படி மலர் டீச்சர் கதாபாத்திரம் பேமஸ் ஆக்கியதோ, அதேபோல் பிரிகிடாவை பவி டீச்சர் கதாபாத்திரம் பிரபலமாக்கியது. ஆஹா கல்யாணம் வெப் தொடரில் பிரிகிடாவில் நடிப்பை பார்த்து அவருக்கு சினிமா வாய்ப்பும் தேடி வந்தது. முதலில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களில் நடித்து வந்தார் பிரிகிடா.
விஷாலின் அயோக்கியா, விஜய்யுடன் மாஸ்டர், முகென் ராவின் வேலன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பிரிகிடா, பின்னர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.
அவர் இயக்கிய இரவின் நிழல் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற சென்ற பிரிகிடாவுக்கு ஹீரோயின் சான்ஸ் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
ஓப்பன் டாக்
நடிகை பிரகீலா சாகா இரவின் நிழல் படத்தின் படப்பிடிப்பின் போது நடைபெற்ற அனுபவங்கள் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, இரவில் நிழல் வழக்கமான படங்கள் போல இல்லை. அது ஒரு நான்-லீனியர் படம்.. சொல்ல போனால் ஒரே சாட்டில் எடுக்கப்பட்ட ஒரு முழு திரைப்படம்.
அப்படியான படத்தில் ஒத்திகை என்பது மிக நீளமானது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது பத்து நிமிடம் 20 நிமிடம் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு ஏதாவது ஒரு இடத்தில் ஒரு சின்ன தவறு ஏற்பட்டால் கூட மீண்டும் முழு படத்தையும் முதலில் இருந்து படமாக்க வேண்டும்.
ஒரு முறை நடிக்கலாம் இரண்டு முறை நடிக்கலாம் ஆனால் மூன்றாவது முறை நான்காவது முறை மீண்டும் அதே காட்சியை நடிக்கும் போது நடிகர்கள் ஒரு விதமான இறுக்கமான மனநிலைக்கு சென்று விடுவார்கள். ஆனால், 24-வது டேக்கில் தான் இந்த ஒட்டுமொத்த படமும் முழுமையாக எடுக்கப்பட்டது.
ஒத்துகையின் போது 20 பேர் முன்பு உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நான் அமர்ந்திருந்த காட்சிகளை படமாக்கினார்கள். எனக்கு பயம் எல்லாம் உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் அமர்ந்திருக்கிறோமே என்று கிடையாது. ஆனால் மீண்டும் இந்த காட்சி படமாக்கப்படுமோ..? என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது.
அந்த படத்தில் பணியாற்றியதால் பார்த்திபன் சாரின் வேதனையை நான் உணர்ந்தேன். இந்த படத்தின் மூலம், மிகப்பெரிய அனுபவம் எனக்கு கிடைத்திருக்கிறது என பேசி இருக்கிறார்.