நடிகை பிரேம பிரியா
2006ம் ஆண்டு தொட்டி ஜெயா என்ற படத்தில் வில்லியாக அறிமுகமான பிரேம பிரியா, வடிவேலுவுடன் பல ஹிட் காமெடி காட்சியில் நடித்து பிரபலமானார். ஏபிசிடி, பம்பரக் கண்ணாலே, இந்திரலோகத்தில் நான் அழகப்பன், சிங்கம், அருவம், யானை, ராஜா ராணி, வேங்கை உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகையாக நடித்திருப்பவர் நடிகை பிரேமா பிரியா. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குநரான தனது கணவரை பறிகொடுத்தார் நடிகை பிரேமா பிரியா. பிரேமா பிரியாவுக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் தனது கணவரை இழந்த பிரேமா பிரியா ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளர். அதில் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாகவும் குழந்தையுடன் நிற்கதியாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளார். எங்களைப் போன்ற சிறு கலைஞர்களுக்கு ஒரு நாளைக்கு பெரிதாக எந்த சம்பளமும் கிடைத்துவிடாது. ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் வரும். அதுவும் மாதத்திற்கு மூன்று நாள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கும். அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு எந்த படங்களுமே இருக்காது என்பதால், இந்த பணத்தை வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்த முடியுமா.
பணமில்லாமல் கணவரை காப்பாத்த முடியாத நிலை
கணவருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டு கால் எடுக்கும் நிலைக்கு சென்றார். அதன்பின் பணமில்லாமல் காப்பாத்த முடியாமல் போய் இறந்துவிட்டார். என்னை பாசமுடனும் பார்த்து வந்தார் கணவர் என்று தெரிவித்துள்ளார். அப்படி பாசம் வைத்தவர் பெட்சிட்டை மூடிட்டு ஏன் அடிப்பார் என்று ஷகீலா கேட்டிருக்கிறார். நான் அழுதா தாங்கமுடியாதுன்னு தான் அப்படி அடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.